வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

விலையில்லா பொருட்கள் வழங்க வலியுறுத்தி மாநகராட்சி, மண்டல அலுவலகங்கள் முற்றுகை

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பாக விலையில்லாப் பொருட்கள் வழங்க வேண்டும் என வலியுறுத்தி புதன்கிழமை பொதுமக்கள் திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகம், மேலப்பாளையம்

News image
Updated On :5 மார்ச் 2014, 8:51 am

ஷேக் அப்துல்காதர்

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பாக விலையில்லாப் பொருட்கள் வழங்க வேண்டும் என வலியுறுத்தி புதன்கிழமை பொதுமக்கள் திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகம், மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி மாநகராட்சி பகுதிக்குட்பட்ட பயனாளிகளுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின் விசிறி ஆகியன வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே தங்கள் பகுதிக்கும் விலையில்லா பொருட்கள் தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். சில தினங்களுக்கு முன்பு மேலப்பாளையம், குறிச்சி பகுதியில் பொதுமக்கள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பாக மாநகராட்சி 30 ஆவது வார்டில் டொக்கன் வழங்கப்பட்ட பயனாளிகளுக்கு புதன்கிழமை விலையில்லா பொருட்கள் வழங்கப்படும் என கிடைத்த தகவலை அடுத்து சுமார் 3 ஆயிரம் பேர் மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தில் திரண்டனர்.எனினும் விலையில்லா பொருட்கள் முழுமையாக வராத காரணத்தால் அவர்களுக்கு பொருட்கள் வழங்கவில்லை. இதையடுத்து அவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருநெல்வேலி கோட்டாட்சியர் க. சீனிவாசன், வட்டாட்சியர் சொர்ணகோமதிநாயம், தனி வட்டாட்சியர் தேவிகா மற்றும் அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

விலையில்லா பொருட்கள் முழுமையாக வரப்பெற்றதும் பயனாளிகளுக்கு நேரடியாக வீடுகளில் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர். மாநகராட்சி அலுவலகம் முற்றுகை: இதனிடையே மாநகராட்சி 28 வது வார்டு வீரமாணிக்கபுரம் பகுதியை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட பெண்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மிக்சி, கிரைண்டர், மின்விசிறி போன்ற விலையில்லா பொருட்கள் வழங்க வேண்டும்.

குடிநீர், சாலை போன்ற அடிப்படை வசதிகள் நிறைவேற்ற வேண்டும். மேலும் பாளையங்கால்வாயில் படித்துறை, கால்வாய் செல்லும் பாதை சீரமைக்க வேண்டும். சுடுகாடுக்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.