சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கப்படாததை கண்டித்து பிப்.5-ல் ஆர்ப்பாட்டம் நடத்த கடலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி பொருளாளர் வே.ராஜரத்தினம் சிதம்பரம் நகர காவல் துறையினரிடம் அனுமதி கோரியிருந்தார்.
ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்து காவல்துறையினர் கடிதம் அளித்தனர். இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வே.ராஜரத்தினம் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்க கோரி விழுப்புரம் சரக டிஐஜி, கடலூர் எஸ்பி, சிதம்பரம் டிஎஸ்பி, நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் மீது ரிட் மனு தாக்கல் செய்தார்.
ரிட் மனு (WP No.4846/ 2014) நீதிபதி பி.ராஜாராம் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு விவாதங்களையும் கேட்ட நீதிபதி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்குமாறு காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

கூட்டணி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம்! - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மறு சீரமைப்பில் மறைந்த 5 தொகுதிகள்
3 தொகுதிகளின் பாமக வேட்பாளா்கள் மாற்றம்: ராமதாஸ் அறிவிப்பு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

