அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் வத்திராயிருப்பு வட்டார வளமையத்தில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான மூன்று நாள் பயிற்சி புதன்கிழமை நிறைவு பெற்றது.மகாராஜபுரம், தம்பிபட்டி, கூமாப்பட்டி, துலுக்கபட்டி, சுந்தரபாண்டியம், மேலக்கோபாலபுரம், அயன்கரிசல்குளம், மேலப்பாளையம் ஆகிய 8 குறுவளமையங்களில் நடைபெற்ற இந்தப் பயிற்சியில் 201 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009-ல் ஏற்படுத்தப்பட்ட செயல்பாடுகளான தரமான கல்வி, குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு, இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், பள்ளி வளர்ச்சித் திட்டம் தயாரித்தல், அரசின் நலத்திட்ட உதவிகள், யோகா, நலவாழ்வு, சத்துணவு மற்றும் சுகாதாரம் உள்ளிட்டவை குறித்து உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் பல்வேறு செயல்பாடுகள் மூலம் பள்ளியில் உறுப்பினர்களின் பங்களிப்பு மற்றும் ஆர்வம் உணர்த்தப்பட்டது.
பயிற்சியை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பரமேஸ்வரி பார்வையிட்டார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார வளமைய ஆசிரியப் பயிற்றுநர்கள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


