அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இளம் பெண் கடத்தல்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இளம் பெண்ணைக் கடத்திச் சென்றதாக ஒருவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:35 am

ஜெயகுமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இளம் பெண்ணைக் கடத்திச் சென்றதாக ஒருவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மகாராஜபுரம், அங்காள அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மு.சுப்புராஜ் (45). இவரது மகள் ராக்கம்மாள் (22) என்பவருக்கு பல இடங்களில் இருந்து பெண் கேட்டு வந்துள்ளார்கள். நல்ல வரனுக்காக காத்திருந்துள்ளார்கள். இந்நிலையில் சுப்புராஜூம் அவரது மனைவியும் வியாழக்கிழமை காலை வேலைக்குச் சென்றுள்ளனர். மாலை வீடு வந்து பார்த்த போது மகள் ராக்கம்மாளைக் காணவில்லையாம். பல இடங்களில் தேடி விசாரித்தத்தில் இதே இடத்தைச் சேர்ந்த கருப்பையா மகன் முத்தையா என்பவர் ராக்கம்மாளை அழைத்துச் சென்றது தெரியவந்துள்ளது.

இது குறித்து வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் சுப்புராஜ் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து ராக்கம்மாளைத் தேடி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.