அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

வீணாகும் வெப்பம் மூலம் மின்சார உற்பத்தி: அமெரிக்க ஆராய்ச்சியாளர்

வீணாகும் வெப்பம் மூலம் மின்சார உற்பத்தி செய்ய இயலும் என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர் ஜெப்ரி பெர்கஸ் கூறினார்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:45 am

ஜெயகுமார்

வீணாகும் வெப்பம் மூலம் மின்சார உற்பத்தி செய்ய இயலும் என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர் ஜெப்ரி பெர்கஸ் கூறினார்.

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் மற்றும் வேதியியல் ஆராய்ச்சியாளர்களுக்கான கருத்தரங்கு துணை வேந்தர் டாக்டர் எஸ்.சரவணசங்கர் தலைமையில் நடைபெற்றது.

 ஆட்டோமொபைல் துறைத் தலைவர் உதயகுமார் வரவேற்றார். அமெரிக்கா நாட்டில் உள்ள அபர்ன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ஜெப்ரி பெர்கஸ் கருத்துரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: வீணாகும் வெப்பம் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான ஆராய்ச்சி அபர்ன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது. ஆலைகளில் வீணாகும் வெப்பம், பெரிய மலைகளில் எரிமலை ஏற்படும் உண்டாகும் வெப்பம் முதலிய வீணாகும் வெப்பத்தை முதலில் பல அடுக்கடுக்காக வைக்கப்பட்டுள்ள மெட்டீரியல்கள் வழியாக செலுத்த வேண்டும்.

இந்த மெட்டீரியல்கள் வெப்பத்தை எடுத்து மின்சாரமாக மாற்றுகின்றன. இதற்காக பிரத்யேக குரோமியம், நிக்கல், கோபால்ட் கலந்த மெட்டீரியல்ஸை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். இதில் செல்லும் வெப்பம் 1000 செல்சியல் வரை இருக்க வேண்டும்.

இதன் மூலம் தற்போது கிடைக்கும் மின்சாரம் ஏறி இறங்கி கிடைக்கிறது. இது ஒரே சீராக கிடைக்க ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது என்றார் அவர்.இதுவரை காற்று, நீர், சூரிய ஒளி உள்ளிட்ட முறைகளில் மின்சார உற்பத்தி நடைபெற்று வந்தாலும், வீணாகும் வெப்பம் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது என்று துணை வேந்தர் டாக்டர் சரவண சங்கர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.