விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கு வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பாக மாணிக்கம் தாகூர் எம்.பி வாக்கு சேகரித்தார்.
அருப்புக்கோட்டை பாரதி நடராஜன் அரங்கத்தில் இன்று காலை 10 மணிக்குத் துவங்கிய கூட்டத்தில் விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் சிறப்புரையாற்றினார்.
காங்கிரஸ் கட்சியின் முக்கியதேர்தல் வாக்குறுதிகளில் 100 நாள் வேலை உறுதித் திட்டத்தை 200 நாட்களாக்குவதாகவும் ரூ.148 எனும் தினச்சம்பளத்தை ரூ.200 ஆக்குவதாக இருப்பதாகவும் அவர் அப்போது தெரிவித்தார்.