ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

சிதம்பரத்தில் சிறுபாலம் உள்வாங்கியதில் லாரி கவிழ்ந்தது: மூவர் காயம்

சிதம்பரம் முத்துக்காமாட்சி அம்மன் தோட்டம் மெயின் ரோட்டில் செவ்வாய்க்கிழமை காலை கருங்கல் ஜல்லி ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று அவ்வழியே வந்தது. அப்போது சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த

News image
Updated On :25 மார்ச் 2014, 8:49 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் நகரில் சாலையில் உள்ள சிறுபாலம் உடைந்து உள்வாங்கியதால், ஜல்லி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது. இதில் சாலையோரம் நின்றிருந்த மூவர் படுகாயம் அடைந்தனர்.

சிதம்பரம் முத்துக்காமாட்சி அம்மன் தோட்டம் மெயின் ரோட்டில் செவ்வாய்க்கிழமை காலை கருங்கல் ஜல்லி ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று அவ்வழியே வந்தது. அப்போது சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த சிறிய பாலம் உடைந்து உள் வாங்கியதில், சக்கரம் அதில் சிக்கி லாரி திடீரென கவிழுந்தது. அப்போது சாலையோரம் நின்றிருந்த எம்.கே.தோட்டத்தைச் சேர்ந்த நிலவழகன் (56), நேதாஜி (44), பாலூத்துங்கரை சிவகுரு (25) ஆகிய மூவர் படுகாயம் அடைந்தனர். இதில் நிலவழகனுக்கு கால்முறிவு ஏற்பட்டது. மூவரும் ராஜா முத்தையா மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.