சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

சிதம்பரம் : வீட்டில் வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் காயம்

சிதம்பரம் மாரியப்பா நகர் இரண்டாவது தெற்கு குறுக்குத் தெருவில், ஓய்வு பெற்ற பேராசிரியர் பன்னீர் செல்வம், தனது வீட்டை வாடைகைக்கு

News image
Updated On :3 மே 2014, 7:02 am

சிதம்பரம் மாரியப்பா நகர் இரண்டாவது தெற்கு குறுக்குத் தெருவில், ஓய்வு பெற்ற பேராசிரியர் பன்னீர் செல்வம், தனது வீட்டை வாடைகைக்கு விட்டுள்ளார். அந்த வீட்டின் இடது புறம் அறையில் இன்று காலை 10 மணிக்கு பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது.

இதில், ஒருவர் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீயணைப்புப்படையினர் வந்து தீயை அணைத்தனர்.

சிதம்பரம் டிஎஸ்பி ராஜாராமன் மற்றும் அண்ணாமலை நகரப் போலீசார்  சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

வீட்டுக்குள் நாட்டு வெடிகுண்டு தயாரித்து வந்திருக்கலாம் என்றும், அது எதிர்பாராத விதமாக வெடித்ததில் இந்த விபத்து நிகழ்ந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.