சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

சிதம்பரம் : ஆறு, குளங்கள் வறண்டது; குடிநீர் பற்றாக்குறை, கால்நடைகள் அவதி

சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் கடும் வெய்யில் காரணமாக கிராமங்களில் உள்ள குளங்கள் மற்றும் வாய்க்கால்கள் வறண்டு போனது. இதனால் குடிநீரின்றி பொதுமக்கள் அவதியுற்றுள்ளனர். குடிநீரின்றி

News image
Updated On :3 மே 2014, 12:29 pm

சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் கடும் வெய்யில் காரணமாக கிராமங்களில் உள்ள குளங்கள் மற்றும் வாய்க்கால்கள் வறண்டு போனது. இதனால் குடிநீரின்றி பொதுமக்கள் அவதியுற்றுள்ளனர். குடிநீரின்றி கால்நடைகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளன.

எனவே வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னைக்கு குடிநீர் வழங்குவதற்காக அண்மையில் மேட்டூரிலிருந்து 6 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு கல்லணை, கீழணை வழியாக வீராணம்ஏரியில் நீர் நிரப்பட்டுவருகிறது. ஆனால் ஏரியை சுற்றியுள்ள சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் பகுதியில் உள்ள கிராமங்களில் வாய்க்கால்கள் மற்றும் குளங்கள் முற்றிலும் நீரின்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள குளிக்கவும், குடிக்கவும் நீரின்றி அவதியுற்றுள்ளனர். குறிப்பாக கால்நடைகள் குடிநீரின்ற கடும் அவதிக்குள்ளாகியுள்ளன. எனவே தமிழக முதல்வர் வீராணம்ஏரியிலிருந்தும், கீழணையிலிருந்து வடக்குராஜன் வாய்க்காலிலும் தண்ணீர் திறந்து விட உத்தரவிட வேண்டும் என கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பி.விநாயகமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.