எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

ஒநாய்கள் கடித்து 17 செம்மறி ஆடுகள் பலி

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டம் ஆலம்பட்டி ஊராட்சி ஆதினிப்பட்டியை சார்ந்தவர் க.நல்லு(55). விவசாயியான இவர் 38 செம்மறி ஆடுகளை வீட்டின் அருகில் உள்ள களத்தில் கிடையில் அடைத்து

News image
Updated On :7 மே 2014, 10:38 am

அருசிவபாலன்

பொன்னமராவதி அருகே புதன்கிழமை ஒநாய்கள் கடித்து 17 செம்மறி ஆடுகள் உயிரிழந்தன.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டம் ஆலம்பட்டி ஊராட்சி ஆதினிப்பட்டியை சார்ந்தவர் க.நல்லு(55). விவசாயியான இவர் 38 செம்மறி ஆடுகளை வீட்டின் அருகில் உள்ள களத்தில் கிடையில் அடைத்து வளர்த்து வந்தார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு மழை பெய்து கொண்டிருந்ததால் ஆடுகளை கிடையில் அடைத்து விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். அதிகாலை 4 மணியளவில் ஆடுகள் கத்தும் ஒசை கேட்டு அவர் ஆட்டுக்கிடைக்கு வந்த போது பல ஆடுகள் இறந்து கிடந்துள்ளன.

இதைக்கண்டு அதிர்ச்சியான நல்லு உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த இரண்டு ஒநாய்கள் ஒட்டம் பிடித்துள்ளன. கழுத்தில் இரத்தம் உறிஞ்சப்பட்ட நிலையில் 17 ஆடுகள் இறந்து கிடந்துள்ளன. 3 ஆடுகள் கழுத்தில் கடிபட்ட நிலையில் இருந்துள்ளது. தொடர்ந்து கால்நடை மருத்துவருக்கு அளித்த தகவலின்பேரில் கால்நடை மருத்துவரால் கடிபட்ட ஆடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

தகவலறிந்து வந்த கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கியராஜ் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். ஒநாய்கள் கடித்து ஆடுகள் பலியான சம்பவம் அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.