6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

லாரி மீது வேன் மோதியதில் இளைஞர்கள் 2 பேர் சாவு

 பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே சனிக்கிழமை அதிகாலை லாரி மீது வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே இளைஞர்கள் 2 பேர்

News image
Updated On :10 மே 2014, 11:30 am

தர்மராஜ்

 பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே சனிக்கிழமை அதிகாலை லாரி மீது வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே இளைஞர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.

சென்னையிலிருந்து விருதுநகருக்கு பருப்பு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றது. லாரியை காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே உள்ள கட்டியாப்பந்தல் பகுதியை சேர்ந்த குப்புசாமி மகன் மணிகண்டன் (24) ஓட்டி வந்தார். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பாடாலூர் அருகே உள்ள இரூர் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் லாரி வந்தபோது, சென்னையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற வேன் மோதியது.

இதில், வேனில் இருந்த கேரள மாநிலம், திருச்சூர் அருகே உள்ள மண்குளங்கள் பகுதியை சேர்ந்த மகாபூர் மகன் ஹைசம் (23), ஒரிஸô மாநிலம், பாட்னா அருகே உள்ள காகிபாரா பகுதியை சேர்ந்த ஆரியா ஜின்னா மகன் தீபக் (19) ஆகியோர் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதுகுறித்து லாரி ஓட்டுநர் மணிகண்டன் அளித்த புகாரின்பேரில், பாடாலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.