6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மேலூர் அருகே முள்கம்பி வேலியைத் தாண்டிய புள்ளிமான் சாவு

மேலூர் சிவகங்கைசாலையில் உள்ள அரசு பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி பின்புறம் உள்ள வெள்ளைமலையில் அதிகமான புள்ளி மான்கள் வசித்துவருகின்றன. இப்பகுதி கிராமமக்கள் மான்களைப்

News image
Updated On :12 மே 2014, 9:14 am

தர்மராஜ்

மேலூர் அருகே தண்ணீர் குடிப்பதற்காக முள்கம்பிவேலியைத் தாண்டிய புள்ளிமான் கீழேவிழுந்து இறந்தது.

மேலூர் சிவகங்கைசாலையில் உள்ள அரசு பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி பின்புறம் உள்ள வெள்ளைமலையில் அதிகமான புள்ளி மான்கள் வசித்துவருகின்றன. இப்பகுதி கிராமமக்கள் மான்களைப் பாதுகாத்து வருகின்றனர். திங்கள்கிழமை அதிகாலையில் கூலிபட்டிசாலையோரத்திலுள்ள விநாயகர்கோவில் அருகே பள்ளத்தில் தண்ணீர்குடிக்கவந்த 2 வயது புள்ளிமான் முள்கம்பிவேலியைத் தாண்டிக் குதித்துள்ளது. அப்போது கம்பிவேலியில் சிக்கி கீழேவிழுந்த புள்ளிமான் அதேயிடத்தில் இறந்தது.

தகவலறிந்த வனத்துறையினர் இறந்த மானைக் கைப்பற்றி விசாரித்துவருகின்றனர். வெள்ளை மலையில் வசித்துவரும் மான்கள் மேலூர்-சிவகங்கை சாலையை இரவில் கடக்கும்போது வாகனங்களில் அடிபட்டு இறக்கின்றன. இதனை தவிர்க்க வனத்துறையினர் சாலையோரத்தில் எச்சரிக்கை பலகைகளை வைக்கவேண்டும் என இப்பகுதி கிராமமக்கள் வலியுறுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.