நெல்லை அருகே ஆளில்லாத கிராசிங்கில் கார் மீது ரயில் மோதல்: 3 பெண்கள் சாவு
திருநெல்வேலி அருகே சனிக்கிழமை ஆளில்லாத ரயில்வே லெவல் கிராசிங்கை கடக்க முயன்றபோது, மாருதி கார் மீது விரைவு ரயில் மோதியதில் கார் தூக்கி வீசப்பட்டது. இந்த விபத்தில் காரில் பின்புறம் இருந்த 3 பெண்கள் சம்பவ இடத்திலே இறந்தனர். காரை ஓட்டி வந்த சேகர குரு உள்ளிட்ட இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.









