காரைக்கால் பகுதியில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்கின்றனர். அண்மையில் பெய்த மழை இவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அந்தந்த பகுதி வேளாண் அலுவலர்கள் பருத்தி விவசாயிகளை அணுகி உரிய ஆலோசனைகளை வழங்கவேண்டும். சம்பா பணிகளை தொடங்குவதற்கு முன்பு, புதுச்சேரி அரசின் வேளாண்துறையானது தரமான விதை, உரம் உள்ளிட்ட இடுபொருள்களை தயார் நிலையில் வைத்திருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மத்தியில் அமையும் அரசு, வேளாண்மைக்கு முக்கியத்துவம் தருமென்பதால் புதுச்சேரி அரசு மத்திய அரசை பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.