நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சொத்துக் குவிப்பு வழக்கு: எ.வ.வேலு நீதிமன்றத்தில் ஆஜர்

தண்டராம்பட்டு சட்டசபைத் தொகுதியில் வெற்றி பெற்று தமிழக உணவுத் துறை அமைச்சராக 5 ஆண்டுகள் பதவி வகித்தார் எ.வ.வேலு. அப்போது, தனது வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்து சேர்த்ததாக

News image
Updated On :27 மே 2014, 12:31 pm

சரவண பெருமாள்

வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்காக, திருவண்ணாமலை நீதிமன்றத்தில் எ.வ.வேலு செவ்வாய்க்கிழமை ஆஜரானார்.

தண்டராம்பட்டு சட்டசபைத் தொகுதியில் வெற்றி பெற்று தமிழக உணவுத் துறை அமைச்சராக 5 ஆண்டுகள் பதவி வகித்தார் எ.வ.வேலு. அப்போது, தனது வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்து சேர்த்ததாக அவர் மீது 2013 ஜனவரியில் வேலூர் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.இந்த வழக்கு திருவண்ணாமலை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இவ் வழக்கின் விசாரணைக்காக செவ்வாய்க்கிழமை (மே 27) எ.வ.வேலு ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி குருமூர்த்தி, வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஜூன் 10-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.