பழநி வைகாசி விசாகம்.ஜூன் 5ல் கொடியேற்றம்
பழநியில் தைப்பூசம், பங்குனி உத்திரவிழாவை தொடர்ந்து, முக்கிய நிகழ்ச்சியான ‘வைகாசி விசாகத் திருவிழா’ ஜூன் 5 முதல் 14 வரை, நடக்கிறது.


பழநியில் தைப்பூசம், பங்குனி உத்திரவிழாவை தொடர்ந்து, முக்கிய நிகழ்ச்சியான ‘வைகாசி விசாகத் திருவிழா’ ஜூன் 5 முதல் 14 வரை, நடக்கிறது.
பழநி வைகாசிவிசாகத் திருவிழா பெரியநாயகியம்மன் கோயிலில் ஜூன் 5ல், காலை 8.30 மணிக்குமேல் 9.30 மணிக்குள் கொடியேற்றத்துடன், துவங்கி தொடர்ந்து பத்துநாட்கள் நடக்கிறது. விழாவின், ஆறாம் நாளான ஜூன் 10ல், மாலை 6.30 மணிக்கு மேல் 8 மணிக்குகள், முத்துக்குமாரசுவாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
விழா நாட்களில் சுவாமி தங்க மயில், வெள்ளி காமதேனு, தங்ககுதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, ஏழாம்நாள் ஜூன் 11ல், வைகாசி விசாகத்தன்று, மலைக்கோயில் சன்னதி அதிகாலை 4 மணி திறக்கப்படும். பெரியநாயகியம்மன் கோயில் தேர்நிலையிருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பாடாகி, நான்கு ரத வீதிகளில் தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் இணைஆணையர்(பொ) ராஜமாணிக்கம், உதவிஆணையர் மேனகா மற்றும் அதிகாரிகள், அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...