எனவே வரும் கோடை காலச்சில் சிதம்பரம். காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் அனைத்து பாசன வாய்க்கால்கள், குளங்கள், ஆறுகள், ஏரிகள் தூர்வாரியும், ஷட்டர்களை சீரமைத்தும் ஒழுங்குபடுத்திட சிறப்பு திட்டம் உருவாக்கி நிதிஅளித்திட வேண்டும், இப்பணிகளில் ஊழில், முறைகேடுகள் இல்லாமல் விவசாய அமைப்புகளின் கண்காணிப்போடு நிறைவேற்றிட வேண்டும். வாய்க்கால்களை அடைத்து கொண்டுள்ள ஆகாயத்தாமரைகள் மற்றும் செடி, கொடிகளை அகற்ற வேண்டும். கடை பரவாாற்று இருபக்க கரைகளும் உயர்த்தப்படாததால் புவனகிரி மற்றும் பரங்கிப்பேட்டை ஒன்றியங்களில் உள்ள 50 கிராமங்களிலும், குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் 20 கிராமங்களும் பாதிக்க்கப்பட்டுள்ளது. எனவே பரவனாற்று கரையை உயர்த்த வேண்டும். பொன்னேரியை தூர்வாரிட வேண்டும். கடந்த ஆண்டை போல அனைத்து சாகுபடிகளுக்கு அரசு பயிர் காப்பீடு செய்து, பிரிமியம் தொகையை செலுத்த வேண்டும். சிதம்பரம் புறவழிச்சாலையில் போதுமான வடிகால் இல்லாததால் நீர் தேங்கி சுமார் 30 கிராமங்கள் பாதிக்கும் நிலை உள்ளது. எனவே புறவழிச்சாலைகளில் உரிய வடிகால் வசதிகளை செய்திட வேண்டும் என கடிதத்தில் கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.