இதனை எடுத்த அலுவலக கணினி துறைத் தலைவர் ராமலிங்கம், அத்தொகையை சிதம்பரம் அண்ணாமலைநகர் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை ஒப்படைத்து புகார் அளித்துள்ளார். அப்புகாரில் கடந்த அக்.26-ம் தேதி அலுவலகத்தை சுத்தம் செய்த போது ஏற்கனவே உள்ள துறைத் தலைவர் வைத்திருந்த பீரோவை திறந்த போது ரூ.15 லட்சம் தொகை இருந்தது. இந்த பணம் யாருடையது என்பது தெரியவில்லை என ராமலிங்கம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீஸார் உரிமம் கோர ஆள் இல்லாததால் சிஆர்பிசி 102 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிதம்பரம் நீதிமன்றத்தில் தொகை ரூ.15 லட்சம் தொகையை ஒப்படைத்தனர்.