மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இலவச வீட்டுமனை பட்டா இருக்கிறது, ஆனால் இடம் இல்லை: நெல்லை ஆட்சியரிடம் புகார் மனு

அரசு வழங்கிய இலவச வீட்டுமனை பட்டா 2009 ஆம் ஆண்டு முதல் எங்கள் கைகளில் இருக்கிறது, ஆனால், அதற்கான இடம் எது என்பதை அளந்து தர அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லையென

News image
Updated On :3 நவம்பர் 2014, 9:27 am

முத்துகுமார்

அரசு வழங்கிய இலவச வீட்டுமனை பட்டா 2009 ஆம் ஆண்டு முதல் எங்கள் கைகளில் இருக்கிறது, ஆனால், அதற்கான இடம் எது என்பதை அளந்து தர அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லையென திருநெல்வேலி ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன் தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றார். மானூர் ஊராட்சி ஒன்றியம், களக்குடி புதுக்காலனி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:0

மானூர் ஊராட்சி ஒன்றியம், களக்குடி கிராமத்தைச் சேர்ந்த புதுக்காலனியில் வசித்து வரும் 32 பேருக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டன. அந்த இடத்துக்கான வரைபடமும் எங்களிடம் வழங்கப்பட்டது. ஆனால், அந்த இடத்தை முறையாக அளவீடு செய்து நான்கு முனைகளிலும் அடையாளம் காட்டித் தரப்படவில்லை. இதுதொடர்பாக கடந்த 5 ஆண்டுகளாக அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளிடம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், வீட்டுமனையின்றி எங்கள் குழந்தைகளுடன் அவதிப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கு உரிய இடத்தை அடையாளம் காட்டித்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் கிராம மக்கள் கூறுகையில், மனுநீதிநாள் முகாம்கள், கிராமசபை கூட்டங்களில் நிலம் குறித்து அளிக்கப்பட்ட மனுக்களுக்கு எவ்வித நடவடிக்கையும் இல்லை. எங்களுக்குச் சொந்தமான இடத்தை எங்களுக்கு வழங்காவிட்டால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.