ரயில் நிலையத்தின் 200 மீட்டர் தூரத்தில் பரிசோதனை செய்துகொண்டிருந்த டிராலி அருகே என்ஜின் பின்புறம் வந்துகொண்டிருந்தது. இதையறிந்த டிராலியின் ஊழியர்கள் பொறியாளர் ராஜ்மோகனிடம் குதித்துவிடுங்கள் என கூறிவிட்டு விலகிக்கொண்டனராம். ஆனால் பொறியாளர் குதிக்காமல் இருந்துவிட்டதாக கூறப்படுகிறது. பின்புறம் வந்த என்ஜின், டிராலி மீது பலமாக மோதியது. இதில் டிராலி தூக்கியெறியப்பட்டது. அதில் இருந்த பொறியாளர் ராஜ்மோகன் கீழே விழுந்ததில் தலை மீது என்ஜின் ஏறியது இதில் தலை, கால் உள்ளிட்டவை நசுங்கி அதே இடத்தில் உயிரிழந்தார்.