தீவிரவாத செயலை யார் செய்தாலும், அதை ஒரு போதும் இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை என்பதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கடந்த அக்.15-ம் தேதி முதல் நவ.15-ம் தேதி வரை தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லீம்களின் தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லீம்களின் தீவிர பிரசாரம் பல வகையான நோட்டீஸ், பேனர், தெருமனை பிரசாரம், பொதுக்கூட்டம், பேரணி ஆகியவற்றின் வாயிலாக பிரசாரம் மேற்கொண்டுள்ளோம். அதனடிப்படையில் கடலூரில் வருகிற நவ.8-ம் தேதி அமைதி பேரணை நடத்தவுள்ளோம் என கே.தாவூத்கைஸர் தெரிவித்தார். பேட்டியின் போது மாவட்டத் தலைவர் ஏ.அப்துல்ரஜாக், மாவட்டச் செயலாளர் ஜி.அஷ்ரப்அலி, பொருளாளர் சிராஜூதீன், அப்துல்லாஹ், துணைச் செயலாளர்கள் எம்.பாஜில்உசேன், ஏ.கே.தாஜ்தீன், அப்துல்சலாம், முகமதுயாசின், கிளை தலைவர் ஆதம், செயலாளர் எம்.முகமது ஹனீப் ஆகியோர் உடன் இருந்தனர்.