இந்த விபத்தில் படுகாயமடைந்த சிவகாசியைச் சேர்ந்த பாஸ்கர் வயது 45, நடத்துநர் குருநாதன், கடலூரைச் சேர்ந்த சந்திரசேகர் வயது 32, குழஞ்சி வயது 33, பாண்டிச்சேரியைச் சேர்ந்த விஜயகுமார் வயது 45, மேலூரைச் சேர்ந்த அழகு வயது 55, ராஜேஸ்வரி வயது 50, சேலத்தைச் சேர்ந்த பாபு வயது 59 உள்ளிட்ட 10 பேர் படுகாயமடைந்து மணப்பாறை மற்றும் மதுரை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மணப்பாறை காவல் துணைக்கண்காணிப்பாளர் முத்தரசு சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினார். இவ்விபத்து குறித்து வளநாடு போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.