6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

6 நிமிடங்களில் முடிவடைந்த நெல்லை மாநகராட்சிக் கூட்டம்!

திருநெல்வேலி மாநகராட்சியின் சாதாரணக் கூட்டம் ஆரம்பித்து 6 நிமிடங்களில் இன்று முடிவடைந்தது. தங்கள்பகுதி கோரிக்கைகளைப் பேச முடியாததால் மாமன்ற உறுப்பினர்கள் கடும் அதிருப்தி தெரிவித்து

News image
Updated On :27 நவம்பர் 2014, 9:35 am

முத்துகுமார்

திருநெல்வேலி மாநகராட்சியின் சாதாரணக் கூட்டம் ஆரம்பித்து 6 நிமிடங்களில் இன்று முடிவடைந்தது. தங்கள்பகுதி கோரிக்கைகளைப் பேச முடியாததால் மாமன்ற உறுப்பினர்கள் கடும் அதிருப்தி தெரிவித்து மேயரை முற்றுகையிட முயன்றனர்.

திருநெல்வேலி மாநகராட்சியின் சாதாரணக் கூட்டம், அதன் தலைவர் இ.புவனேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும் தமிழக மீனவர்கள் 5 பேரை மீட்கவும், முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி தண்ணீரைத் தேக்கவும் சரியான நேரத்தில் முடிவெடுத்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதன்பின்பு மாமன்ற உறுப்பினர்கள் பேசுவதற்கு முன்பாக கூட்டப் பொருள்களை வாசிக்கக் கூறிய மேயர் இ.புவனேஸ்வரி, முதல் இரு தீர்மானங்களை நிறைவேறுவதாகவும், மூன்றாவது தீர்மானம் ஆய்வுக்கு உள்படுத்தப்படுவதாகவும், 4 முதல் 39 ஆவது தீர்மானம் வரையிலான பணிகளுக்கு மறுஏலம் விட தீர்மானம் நிறைவேறுவதாகவும், புதிய பொருள்களாக கொடுக்கப்பட்டுள்ள 1 முதல் 8 தீர்மானங்கள் நிறைவேறுவதாகவும் கூறியதும் கூட்டம் நிறைவேறுவதாகக் கூறி தனக்கான பிரத்யேக வழி வழியாக வெளியேறினார்.இதனால் மாநகராட்சிக் கூட்டம் தொடங்கி மொத்தம் 6 நிமிடங்களில் நிறைவடைந்தது.

இதற்கிடையே மீனவர்கள் மீட்பு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தீர்மானம் நிறைவேற்றாததைக் கண்டித்து வெளிநடப்பு செய்வதாகக் கூறி பா.ஜ.க.வைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர் பொன்.அழகுராஜா வெளிநடப்பு செய்தார். மக்களின் பிரச்னைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து தி.மு.க. மாமன்ற உறுப்பினர்கள் மேயரின் மேஜை அருகே சென்று முற்றுகையிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.