நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நகைக்கடை வியாபாரியை விசாரணைக்கு போலீஸார் அழைத்துச் சென்றதைக் கண்டித்து மறியல்:கடையடைப்பு

புதுச்சேரியில் நகைக்கடை வியாபாரியை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச்சென்றதைக் கண்டித்து நகைக்கடை வியாபாரிகள் வெள்ளிக்கிழமை கடைகளை

News image
Updated On :28 நவம்பர் 2014, 12:30 pm

சுஜித்குமார்

புதுச்சேரியில் நகைக்கடை வியாபாரியை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச்சென்றதைக் கண்டித்து நகைக்கடை வியாபாரிகள் வெள்ளிக்கிழமை கடைகளை அடைத்து நேரு வீதி-பாரதி வீதி சந்திப்பில் மறியல் செய்தனர்.

புதுச்சேரி கொசக்கடை வீதியில் ஏராளமான நகைக்கடைகள் உள்ளன. இதில் நகைக்கடை நடத்தி வரும் பாலகிருஷ்ணனை, திருட்டுநகை வாங்கியது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக வியாழக்கிழமை இரவு தமிழக போலீசார் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்த நகைக்கடை உரிமையாளர்கள், ஊழியர்கள், வியாபாரிகள் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி பஜாரில் உள்ள அனைத்து நகை கடைகளையும் அடைத்து விட்டு, புதுச்சேரி மையபகுதியான நேருவீதியில் இன்று சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

இவர்களுக்கு ஆதரவாக வணிகர் கூட்டமைப்பினரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது தமிழக போலீசாருக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினர். மேலும் தமிழக போலீசார் பிடித்து சென்ற பாலகிருஷண்னை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த சம்பவத்தால் அங்கு போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. இதனால் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பெரியகடை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். தமிழக போலீசாரிடம் பேசி, பாலகிருஷ்ணனை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதிஅளித்தன் பேரில் அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதுகுறித்து வணிகர் கூட்டமைப்பு நிர்வாகிகள் சிவசங்கரன், பாலு ஆகியோர் கூறியது:

புதுவையில் வர்த்தகர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை நீடித்து வருகிறது.நகைக் கடை வியாபாரிகளை அடிக்கடி ரெüடிகள் மிரட்டி வந்தனர். தற்போது  திருட்டு நகை விசாரணை என்ற பெயரில் வியாபாரி பாலகிருஷ்ணனை போலீஸார் அழைத்துச் சென்றுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. அவரை விடுவிக்கும் வரை நகைக்கடைகளை திறக்க மாட்டோம் எனத்தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தால் நேருவீதியில் சுமார் 1 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.