எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ஜெயலலிதாவுக்கு ஆதரவாக காரைக்காலில் அதிமுகவினர் உண்ணாவிரதப் போராட்டம்

காரைக்காலில் ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அதிமுகவினர் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
Updated On :3 அக்டோபர் 2014, 11:38 am

செல்வ முத்துகுமாரசாமி

காரைக்காலில் ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அதிமுகவினர் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்ததையொட்டி அவர் சிறையிலடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு வரும் வேளையில், புதுவை மாநில அதிமுகவினர் ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் காரைக்காலில் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேருந்து நிலையம் அருகே நடந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் எஸ்.பி.கருப்பையா தலைமை வகித்தார். மாவட்ட செயலர் எம்.வி.ஓமலிங்கம் முன்னிலையில், புதுவை மாநில அதிமுக செயலரும் சட்டப்பேரவை உறுப்பினருமான பெ.புருஷோத்தமன் போராட்டத்தை தொடங்கிவைத்துப் பேசினார்.

குற்றம் செய்யாத ஜெயலலிதாவுக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளதாகவும், ஜாமீன் மறுப்பு தெரிவிப்பதும் சட்ட நெறிமுறைகளுக்கு புறம்பானது எனவும், அவர் விடுதலை செய்யப்படவேண்டும். புதுவை மாநில அதிமுக அவருக்கு எப்போதும் துணை நிற்குமென கட்சியினர் பேசினர். மேலும்  கட்சியினர், காவிரித் தண்ணீரை பெற்றுத்தந்ததற்காக கர்நாடக அரசு ஜெயலலிதாவை பழிவாங்குவதாகப் பேசினர்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் மக்களவை முன்னாள் உறுப்பினர் பேராசிரியர் மு.ராமதாஸ், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் வி.கே.கணபதி, வி.எம்.சி.வி.கணபதி மற்றும் அதிமுக மாவட்ட பொருளாளர் எச்.எம்.ஏ.காதர், நகர செயலர் ஜி.வி.ஜெயபால், துணை செயலர் சாகுல்ஹமீது, ஜீவானந்தம் உள்ளிட்ட சுமார் 300 பேர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.