நாட்டின் எந்த மாநிலத்தின் முதல்வர்களும் செய்ய முடியாத, மக்கள் வரவேற்கும் சாதனைகளை செய்தவர் ஜெயலலிதா. சட்டப்பேரவைத் தேர்தலிலும், மக்களவைத் தேர்தலிலும் தமிழகத்தில் காங்கிரஸூக்கும், திமுகவுக்கும் ஜெயலலிதா மரண அடி கொடுத்தார். மீள முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட கட்சிகள், ஜெயலலிதாவை, அதிமுகவை முடக்கிவிடலாமென நினைத்து காய் நகர்த்துகிறது. இதில் அவர்கள் வெற்றிபெறமுடியாது. மேல் முறையீடுகள், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என உள்ளபோது, இதன் மூலம் நீதி நிலைநாட்டப்பட்டு வெளிவருவார். அப்போது காங்கிரஸூக்கும், திமுகவிற்கும் சரியான பாடம் புகட்டுவார்.