கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி போராட்டம்: திருத்துறைப்பூண்டி எம்.எல்.ஏ உள்ளிட்ட 3 ஆயிரம் பேர் கைது

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரியும், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வரட்சி நிவாரண நிதி வழங்கக் கோரியும், வேலை உறுதியளிப்புத் திட்டத்தை உறுதியாக

News image
Updated On :16 அக்டோபர் 2014, 8:59 am

ரவி

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரியும், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வரட்சி நிவாரண நிதி வழங்கக் கோரியும், வேலை உறுதியளிப்புத் திட்டத்தை உறுதியாக செயல்படுத்துவதுடன் 200 நாட்களாக உயர்த்தக் கோரியும், அதன் ஊதியத்தை ரூ.400 ஆக உயர்த்தவும், வீடு கட்ட ரூ. 10 லட்சம் நிதி உதவி வழங்கக் கோரியும், விவசாயிகளுக்கான ஓய்வூதியம் ரூ. 3000

வழங்க வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் உலகநாதன், மாநில விவசாய சங்க செயலர் முத்தரசன் தலைமையில் சுமார் 3 ஆயிரம் பேர், திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பினன்ர் அவர்கள் கைது செய்யப்பட்டு மங்களநாயகி மண்டபத்தில் சிறை வைக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.