தீபாவளிப் பண்டிகையை ஒட்டி கடலூர் கேப்பர் மலையில் உள்ள மத்தியச் சிறைச் சாலையில் அடைபட்டுள்ள 1,200 கைதிகளுக்கு லயன்ஸ் சங்கம் சார்பில் சிக்கன் பிரியாணி திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
லயன்ஸ் சங்க மாவட்ட ஆளுநர் விஜயலட்சுமி சிவக்குமார் தலைமையில் சங்க உறுப்பினர்கள் மத்திய சிறைச்சாலைக்குச் சென்று, 1,200 கைதிகளுக்கு சிக்கன் பிரியாணி வழங்கினர். அசைவம் சாப்பிடாத கைதிகளுக்கு வெஜிடபுள் பிரியாணி வழங்கப்பட்டது.
லயன்ஸ் சங்க நிர்வாகிகள் ஞானவேல், ராஜேந்திரன், ஆர்த்தி நாகராஜன் மற்றும் நெப்போலியன் உள்ளிட்டோர் கைதிகளுக்கு பிரியாணி வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.
சிறைக் கண்காணிப்பாளர் முருகேசன் மற்றும் கூடுதல் கண்காணிப்பாளர் ஆண்டாள் ஆகியோர் கைதிகளை வரிசைப்படுத்தி உணவு உண்ணச் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.