சிதம்பரம் மீதிகுடி ரோட்டில் உள்ள பழனியப்பாநகரில் வசிப்பவர் ஸ்ரீதர் (49). கடலூர் மின்வாரிய அலுவலகத்தில் உதவி இயக்குநராக பணியாற்றும் இவர் கடந்த அக்.21-ம் தேதி தீபாவளிக்காக வீட்டின் பூட்டிக் கொண்டு குடும்பத்துடன் சொந்த ஊருக்கு சென்று திங்கள்கிழமை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் ஜன்னல் கம்பியை பெயர்த்து மர்மநபர்கள் உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 7 பவுன் நகைகள், 2 வெள்ளி குத்துவிளக்குகள் மற்றும் வெள்ளிப்பொருள்கள், ரொக்கம் ரூ.3 ஆயிரம் ஆகியவற்றை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஸ்ரீதர் அளித்த புகாரின் பேரில் அண்ணாமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளார். கடலூரிலிருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகள் பதிவு செய்யப்பட்டன.