புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தராக சந்திரா கிருஷ்ணமூர்த்தி பொறுப்பேற்றதில் இருந்து அங்கு சர்வாதிகார நிலை தென்படுகிறது. அனைத்து செயல்களும் சட்டவிதிகளை மீறி மேற்கொள்ளப்படுகின்றன.தனியார் பொறியியல் கல்லூரிக்கு முறைகேடாக அனுமதி வழங்கி பிரச்னையில் சிபிஐ விசாரணைக்கு ஆளாகி உள்ள பேராசிரியர் அரிகரனுக்கு பதவி உயர்வு, தனது நோக்கத்தை நிறைவேற்ற ஒத்துழைக்காத பதிவாளர் யதுவன்ஷியை மாற்ற நடவடிக்கை, வெளிப்படையற்ற முறையில் பாதுகாவலர்கள் நியமனம், பாலியல் தொல்லைக்கு ஆளான மாணவிகள் மீதே நடவடிக்கை என பல்வேறு செயல்கள் நடந்துள்ளன.