மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நெல்லை அருகே கார்-பேருந்து மோதல்: ராஜபாளையம் இளைஞர்கள் இருவர் சாவு

திருநெல்வேலி மாவட்டம், மானூர் அருகே செவ்வாய்க்கிழமை கார்-பேருந்து மோதிய விபத்தில் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் இறந்தனர். மேலும் 3 பேர் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

News image
Updated On :9 செப்டம்பர் 2014, 1:42 pm

முத்துகுமார்

திருநெல்வேலி மாவட்டம், மானூர் அருகே செவ்வாய்க்கிழமை கார்-பேருந்து மோதிய விபத்தில் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் இறந்தனர். மேலும் 3 பேர் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள கம்மாபட்டியைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் சந்திரன் (30). இவர், தனது நண்பர்களாக அதே ஊரைச் சேர்ந்த சுந்தரம் மகன் சந்தனகுமார் (30), ராஜகுரு, சேது, தாமோதரன் ஆகியோருடன் திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நோயாளி ஒருவரை பார்க்க காரில் திருநெல்வேலிக்கு வந்தனர்.

பின்னர் திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு ராஜபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். காரை சந்தனகுமார் ஓட்டினாராம். இதேபோல போடியில் இருந்து கன்னியாகுமரி நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை ஆண்டிபட்டியைச் சேர்ந்த முருகன் ஓட்டிவந்தார்.

ராமையன்பட்டியை கடந்து மானூர் அருகே நரியூத்து பகுதியில் சென்றபோது காரும், அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதின. இதில் காரில் பயணித்த சந்திரன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்ததும் மானூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து காயமடைந்த 4 பேரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சந்தனகுமார் இறந்தார். மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மானூர் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.