மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மனைவியுடன் சரியாக குடும்பம் நடத்தாமல், வேறு பெண்ணை திருமணம் செய்தவர் மீது வழக்கு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள குன்னூர், போக்குவரத்து நகரைச் சேர்ந்தவர் ரெட்டலிங்கம் மகள் சுந்தரம்மாள் (27). இவருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர், மாலைபட்டி மாரியப்பன் மகன் பாண்டிதுரை என்பவருக்கும் 2008-ம்

News image
Updated On :13 செப்டம்பர் 2014, 12:06 pm

கோ.ஜெயக்குமார்

மனைவியுடன் சரியாக குடும்பம் நடத்தாமல், வேறு பெண்ணை திருமணம் செய்தவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள குன்னூர், போக்குவரத்து நகரைச் சேர்ந்தவர் ரெட்டலிங்கம் மகள் சுந்தரம்மாள் (27). இவருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர், மாலைபட்டி மாரியப்பன் மகன் பாண்டிதுரை என்பவருக்கும் 2008-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தின்போது, ஒன்பதரை பவுன் நகைகள் மற்றும்  பணம் ரூ.16 ஆயிரம் வரதட்சிணையாக கொடுத்தார்களாம். பாண்டிதுரை மனைவியுடன் சரியாக குடும்பம் நடத்தாமல், பெற்றோர் பேச்சைக் கேட்டுக்கொண்டு ராஜேந்திரன் என்பவர் மகள் தமிழரசியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டாராம்.

இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சுந்தரம்மாள் புகார் செய்தார். போலீஸார் பாண்டிதுரை, அவரது தந்தை மாரியப்பன், தாய் சின்னமுனியம்மாள், சகோதரிகள் முனீஸ்வரி, பெரிய முனியம்மாள் மற்றும் இரண்டாவது மனைவி தமிழரசி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.