நேற்று ஞாயிறுக் கிழமை பேனா வாங்க கடைக்குச் சென்ற போது, ஒரு மர்ம கும்பல் அவரைக் காரில் கடத்திச் சென்றது. சாக்கு மூட்டையில் கட்டி கடத்தப்பட்ட அந்தச் சிறுவன் திருப்பரங்குன்றம் பகுதியில் வந்தபோது, திருப்பரங்குன்றம் பூங்கா அருகே சிறுநீர் கழிக்க வேண்டும் என்று கூறியுள்ளான். இரவு என்பதால் அந்தச் சிறுவனை அவிழ்த்து விட்டு கீழே இறங்கி விட்டுள்ளனர். அப்போது அந்தச் சிறுவன் தன்னை ஒரு கும்பல் கடத்தி வருவதாகக் கூச்சலிட்டுள்ளான். அதைக் கேட்ட அக்கம்பக்கத்தவர், கூடியதால், அந்த கும்பல் சிறுவனை விட்டுவிட்டு காரை எடுத்துக் கொண்டு தப்பித்துள்ளனர். கடத்தல்காரர்கள் ஹிந்தியில் பேசியதால் அவர்கள் வடமாநிலத்தவரா என்று திருநகர் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.