இந்த தேசியப் பணியில் மாணவர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும், நாட்டிலிருந்து பல நன்மைகளைப் பெறும் நாம், நாட்டு மக்களுக்கு உதவுவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என்றும் ஆசிரியர்கள் விளக்கியுள்ளார். மாணவர்கள் தங்களால் இயன்ற உதவிகளை கொடுக்கலாம் என்று கூறியுள்ளார். 1-ம் வகுப்பு மாணவி வைஷ்ணவி, சாப்பாடு கொடுப்பதாயும், மற்றொரு 1-ம் வகுப்பு மாணவி தண்ணீர் கொடுப்பதாயும் கூறினார். ஆசிரியர் மேலும் இதுபோன்றவற்றை அனுப்ப இயலாது என்று விளக்கிக் கூறியதையடுத்து, தங்களுக்கு மதிய உணவிற்கு தொட்டு சாப்பிடுவதற்கு ஊறுகாய் வாங்குவதற்கு தரும் பணத்தையும், மிட்டாய் வாங்கி சாப்பிடத் தரும் பணத்தையும் கொடுப்பதாய் மாணவர்கள் தெரிவித்தனர்.