டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே முதியவர் அடித்துக் கொலை: மருமகள், பேத்தி கைது

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே முதியவரை கம்பால் அடித்துக் கொலை செய்த அவரது மருமகள் மற்றும் பேத்தியை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

News image
Updated On :24 செப்டம்பர் 2014, 5:07 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே முதியவரை கம்பால் அடித்துக் கொலை செய்த அவரது மருமகள் மற்றும் பேத்தியை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கோட்டையூர், தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் மு.பெரியகருப்பன் (65). இவரது பெயர், குடும்ப அட்டையில் மகள் மற்றும் மகனுடன் சேர்ந்து இருந்துள்ளது. செவ்வாய்கிழமை இரவு பெரியகருப்பன் குடும்ப அட்டையை மகள் பிள்ளை பேத்தியான பாலமுருகன் மனைவி பாக்கியவதி (23), மற்றும் மருமகளான காளிமுத்து மனைவி சுந்தரம்மாள் (33) ஆகியோரிடம் கேட்டுள்ளார். அவர்கள் குடும்ப அட்டையை தர மறுத்து தகராறில் ஈடுபட்டு, கம்பால் பெரியகருப்பனை அடித்துள்ளனர்.

இதில் காயமுற்ற அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தார்.வத்திராயிருப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்து பேத்தி பாக்கியவதி மற்றும் மருமகள் சுந்தரம்மாளைக் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.