திருப்பதி ஸ்ரீவெங்கடேசப் பெருமாளுக்கு மாலை அனுப்பும் நிகழ்ச்சி
திருப்பதியில் நடைபெற்று வரும் புரட்டாசி பிரமோற்சவத்தில், ஸ்ரீவெங்கடேசப் பெருமாளுக்கு சாற்றுவிக்க, ஸ்ரீஆண்டாள் சூடிக்களைந்த மாலை அனுப்பும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.பூமிப்


திருப்பதியில் நடைபெற்று வரும் புரட்டாசி பிரமோற்சவத்தில், ஸ்ரீவெங்கடேசப் பெருமாளுக்கு சாற்றுவிக்க, ஸ்ரீஆண்டாள் சூடிக்களைந்த மாலை அனுப்பும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.பூமிப் பிராட்டியான ஸ்ரீஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி மற்றும் பரிவட்டம், திருமலை திருவேங்கடமுடையானுக்கு புரட்டாசி பிரமோற்சவத்தின் 5-ம் திருநாளன்று சாற்றப்படுவது வழக்கம் தொன்றுதொட்டு நடைபெற்று வருகிறது.இதற்காக ஸ்ரீஆண்டாளுக்கு மாலை, பரிவட்டம், கிளி உள்ளிட்டவை சாற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோயில் தக்கார் கே.ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் இவற்றை கோயில் ஸ்தானிகம் ரெங்கராஜன் (எ) ரமேஷ் தலையில் பட்டர்கள் மாட வீதிகள் வழியே எடுத்து வந்தார். பின்னர் இவை தனிக் காரில் திருப்பதிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...