ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

அதிமுகவினரை திட்டி மிரட்டியதாக தேமுதிகவினர் மீது வழக்குப்பதிவு

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிற்கு பெங்களூர் நீதிமன்றம் தண்டனை விதித்ததை கண்டித்து அதிமுகவினர் கடந்த செப்.26-ம் தேதி ஊர்வலமாக வந்தனர். அப்போது தேமுதிகவினர் நகரச் செயலாளர் சி.

News image
Updated On :29 செப்டம்பர் 2014, 12:29 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பத்தில் அதிமுரவினரை திட்டி மிரட்டியதாக தேமுதிகவினர் மீது நகர போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிற்கு பெங்களூர் நீதிமன்றம் தண்டனை விதித்ததை கண்டித்து அதிமுகவினர் கடந்த செப்.26-ம் தேதி ஊர்வலமாக வந்தனர். அப்போது தேமுதிகவினர் நகரச் செயலாளர் சி.க.விஜயகுமார் தலைமையில் வெடி, வெடித்து இனிப்பு வழங்கி கொண்டிருந்தனர். அப்போது தேமுதிகவினர் மாவட்டச் செயலாளர் சபா.சசிக்குமார் தூண்டுதலின் பேரில் அதிமுகவினரை திட்டி மிரட்டியதாக அதிமுக கிளை செயலாளர் ரவிச்சந்திரன் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் நகர போலீஸார் கடலூர் மாவட்ட தேமுதிக செயலாளர் தூண்டுதலின் பேரில் அதிமுகவினரை நகரச் செயலாளர் விஜயகுமார், பாலு, பாலகிருஷ்ணன், ஐயப்பன், கணேசன் உள்ளிட்ட அடையாளம் தெரிந்த 14 பேர் மற்றும் அடையாளம் தெரியாத 10 பேர் திட்ட மிரட்டியதாக வழக்குப் பதிந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.