டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பேரூராட்சி செயல் அலுவலரை தாக்கியதாக துணைத் தலைவர் உள்ளிட்ட மூவர் மீது வழக்கு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பேரூராட்சி செயல் அலுவலரை தாக்கியதாக செவ்வாய்கிழமை பேரூராட்சி பெண் துணைத் தலைவர், அவரது கணவர் மற்றும் மகன் தாக்கி, சட்டையை

News image
Updated On :30 செப்டம்பர் 2014, 11:38 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பேரூராட்சி செயல் அலுவலரை தாக்கியதாக செவ்வாய்கிழமை பேரூராட்சி பெண் துணைத் தலைவர், அவரது கணவர் மற்றும் மகன் தாக்கி, சட்டையை கிழித்ததாக போலீஸில் செயல் அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

எஸ்.கொடிக்குளம் பேரூட்சியின் கூட்டம் செவ்வாய்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்துள்ளது. இந்நிலையில் காலை 11.30 மணியளவில் பேரூராட்சி அலுவலகத்திற்கு துணைத் தலைவர் முத்துலட்சுமி அவரது கணவர் அ.பாண்டி மற்றும் மகன் வந்துள்ளார்கள்.அ.தி.மு.க பொதுச் செயலாளர் கைது சம்பத்தையடுத்து அசாதாரண நிலை நிலவுகையில் ஏன் பேரூராட்சி கூட்டத்தை நடத்த வேண்டும். நாங்கள் செவ்வாய்கிழமை விருதுநகரில் இதனைக் கண்டித்து அ.தி.மு.க. சார்பில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு செல்கிறோம் என்று செயல் அலுவலர் ம.சேகரிடம் சொல்லியுள்ளார்கள். அவர் அதற்கு கூட்டம் அப்படிதான் நடக்கும். தலைவரைப் போய் கேளுங்கள் என்று சொல்லி முறையில்லாமல் பேசியதாகக் கூறப்படுகிறது. தலைவர் சுப்புலட்சுமி கைப்பமிட்டுவிட்டு உண்ணாவிரத்திற்குச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. இதில் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து செயல் அலுவலர் ம.சேகர் (34), கூமாப்பட்டி காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் துணைத் தலைவர் முத்துலட்சுமி, அவரது கணவர் பாண்டி மற்றும் அவர்களின் மகன் சேர்ந்து தன்னை அரசுப் பணி செய்யவிடாமல் தடுத்து, தாக்கி, சட்டையைக் கிழித்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பாக கூமாப்பட்டி போலீஸார் துணைத் தலைவர் உள்ளிட்ட மூவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்துத வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.