மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் நாளை தொடக்கம்!மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!இந்தியாவுக்கு வரவேண்டிய கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையில் சிக்கித் தவிப்பு!21 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களுக்கு மீண்டும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடுஈரான் பொதுக் கட்டமைப்பை நிா்மூலமாக்குவோம்: டிரம்ப் மிரட்டல்
/

விராலிமலை அருகே பெண்ணை மிரட்டிய நான்கு பேர் மீது வழக்கு

விராலிமலை அருகே சனிக்கிழமை தோட்டத்து மரங்களை வெட்டியவர்களை, தட்டிக்கேட்ட பெண்ணை மிரட்டிய நான்கு பேர் மீது போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர்.

News image
Updated On :11 ஏப்ரல் 2015, 3:15 pm

சி. உதயகுமார்

விராலிமலை அருகே சனிக்கிழமை தோட்டத்து மரங்களை வெட்டியவர்களை, தட்டிக்கேட்ட பெண்ணை மிரட்டிய நான்கு பேர் மீது போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர்.

விராலிமலை அருகே உள்ள கொடிக்கால்பட்டியைச் சேர்ந்தவர் ரங்ராஜ் மனைவி பழனியம்மாள்(55) இவருக்கு சொந்தமாக பொன்னிகுளத்துப்பட்டியில் உள்ள தோட்டத்தில் இருந்த  வேலிகருவை மரங்களை  கொடிக்கால்பட்டியைச் சேர்ந்த பழனியாண்டி மகன்கள் கருப்பையா, கிருஷ்ணமூர்த்தி, கருப்பையா மகன் ராமசந்திரன், யுவராஜ் உள்ளிட்ட நால்வரும் வெட்டியுள்ளனர். இதை தட்டி கேட்ட பழனியம்மாளை அரிவாளை காட்டி மிரட்டியாதாக கூறப்படுகிறது

இதுகுறித்து பழனியம்மாள் விராலிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து காவல் ஆய்வாளர் அ. மா. செந்தில்மாறன் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.