விருதுநகரில் மதுக்குடிக்க பணம் கேட்டு தர மறுத்த மனைவியை கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்த கணவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
விருதுநகரில் ஆண்டிக்கிணற்றுத் தெருவைச் சேர்ந்தவர் சுப்புராஜ் என்பவரின் மகள் நர்மதா(25). இவருக்கு கடந்த 2003 ராமனுஜம் என்பவருடன் திருமணம் நடந்து முடிந்த நிலையில் பெண்குழந்தை உள்ளது. இந்நிலையில் இருவருக்கும் இடையே குடும்ப பிரச்னை காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதையடுத்து, பெற்றோர் சம்மதத்துடன் இரண்டவதாக வீரவாஞ்சியை சேர்ந்த சந்திரசேகர்(35) என்பவருடன் திருமணம் நடந்து, ஒன்றரை ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சந்திரசேகர் குடிப்பழக்கம் உடையவர் என்பதால் அடிக்கடி மனைவி நர்மதாவிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்வாராம். இதேபோல், புதன்கிழமை இரவு மது குடிக்க பணம் கேட்கவே தர மறுத்த நிலையில், கத்தியால் மனைவியை குத்தி காயப்படுத்தியதோடு, கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இது தொடர்பாக விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் சந்திரசேகர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்த பெண் கைது

தோ்தல் பிரசார சீா்திருத்தம் கோரும் சுயேச்சைகள்!

தொகுதி நிலவரம் - வேப்பனஅள்ளி! அதிமுக, திமுக வெற்றியை தீா்மானிக்கும் தவெக, நாதக!

பரமத்தி வேலூா் தொகுதி! மீண்டும் நேரடி போட்டியில் திமுக-அதிமுக!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

