அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

விருதுநகர் அருகே அனுமதியின்றி கருந்திரிகள் தயாரித்த 4 பேர் கைது

விருதுநகர் அருகே குடியிருப்புகளில் அனுமதியின்றி கருந்திரிகளை தயார் செய்தது தொடர்பாக 4 பேரை சூலக்கரை போலீஸார் கைது செய்து, கருந்திரிகட்டுக்களையும் செவ்வாய்கிழமை இரவு பறிமுதல் செய்தனர்.

Updated On :26 ஆகஸ்ட் 2015, 11:02 am

விருதுநகர் அருகே குடியிருப்புகளில் அனுமதியின்றி கருந்திரிகளை தயார் செய்தது தொடர்பாக 4 பேரை சூலக்கரை போலீஸார் கைது செய்து, கருந்திரிகட்டுக்களையும் செவ்வாய்கிழமை இரவு பறிமுதல் செய்தனர்.

விருதுநகர் அருகே சூலக்கரைமேடு பகுதியில் அனுமதியின்றி வீடுகளில் பட்டாசு உற்பத்தி செய்ய பயன்படும் கருந்திரிகளை தயார் செய்து வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் அடிப்படையில் சூலக்கரைமேடு பகுதியில் குடியிருப்புகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, குடியிருப்புகளில் கருந்திரி தயாரித்தது தெரியவந்தது.

இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த வசந்தா(55),நாகப்பன்(72), சபாபதி(53), சத்யா(32) ஆகியோர் மீது சூலக்கரை காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிந்து கைது செய்தனர். அதோடு, அவர்களது வீடுகளில் இருந்து தலா ரூ.200 கருந்திரி கட்டுக்களையும் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு அழிப்பதற்காக கொண்டு சென்றனர்.

கருந்திரி கடத்திய முதியவர் கைது: விருதுநகர் அருகே ஆர்.ஆர்.நகர் சாலை வச்சக்காரப்பட்டி போலீஸார் புதன்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சங்கரலிங்காபுரத்திலிருந்து ஆர்.ஆர்.நகர் நோக்கி சென்ற இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, அந்த வாகனத்தில் சாக்கு பையில் 130 கருந்திரி கட்டுக்கள் இருந்தது.

இது குறித்து விசாரணை மேற்கொண்டதில் சங்கரலிங்காபுரத்தைச் சேர்ந்த செல்லையா(62) என்பதும், கருந்திரிகளை வாடியூரில் உள்ள பட்டாசு ஆலைக்கு கொண்டு செல்வதாகவும் தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் அவர் மீது வச்சக்காரப்பட்டி போலீஸார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.