மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் நாளை தொடக்கம்!மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!இந்தியாவுக்கு வரவேண்டிய கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையில் சிக்கித் தவிப்பு!21 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களுக்கு மீண்டும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடுஈரான் பொதுக் கட்டமைப்பை நிா்மூலமாக்குவோம்: டிரம்ப் மிரட்டல்
/

விராலிமலை பகுதிகளில் அனுமதியின்றி மதுவிற்பனை: பெண் உள்பட 7 பேர் கைது

விராலிமலை அருகே அனுமதியின்றி அரசு மதுபாட்டில் விற்பனை செய்த 7 பேரை போலீஸார் இன்று கைது செய்தனர்.

News image
Updated On :2 டிசம்பர் 2015, 4:22 pm

சி. உதயகுமார்

விராலிமலை அருகே அனுமதியின்றி அரசு மதுபாட்டில் விற்பனை செய்த 7 பேரை போலீஸார் இன்று கைது செய்தனர்.

விராலிமலை அருகே உள்ள பல்வேறு பகுதியில் அனுமதியின்றி தமிழ்நாடு மாநில வாணிப கழகம்( டாஸ்மாக்) மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக விராலிமலை போலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து அப்பகுதிகளில் போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ராஜாளிப்பட்டி தென்னரசு(40) கோமங்களம் கண்ணையா(40) புதுப்பட்டி சின்னையா(53)பெருமாபட்டி தமிழரசி(40) கல்குடி ரங்கசாமி(28) தாளப்பட்டி சுந்தரம்(49) விராலிமலை சோதனைச் சாவடி பாபு(47) உள்ளிட்ட 7 பேரும் அரசு மதுபான பாட்டில்களை அனுமதியின்றி பெட்டிக்கடையில் பதுக்கி விற்பனை செய்து கொண்டிருந்ததாக அவர்களை கைது செய்தனர், அவர்களிடம் விற்பனைக்கு வைத்திருந்த 35 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரிகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.