விருதுநகர் மாவட்ட நீதித்துறை ஊழியர் சங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர் வழக்குரைஞர் சங்கம், வழக்குரைஞர்கள் எழுத்தாளர் சங்கம், விருதுநகர் பார் அசோஸியேசன், விருதுநகர் அட்வகேட் அசோஸியேசன் ஆகியவை இணைந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருள்களைத் திரட்டியுள்ளன.இவற்றை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ரா.தாரணி, விரைவு மகளிர் நீதிமன்ற நிதிபதி என்.ராஜலட்சுமி, மாவட்ட குற்றவியல் நீதிபதி வசந்தி, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி பசும்பொன் சண்முகையா, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி நம்பிராஜ், விருதுநகர் சார்பு நிதிபதி பத்மா, ஸ்ரீவில்லிபுத்தூர் வழக்குரைஞர் சங்கச் செயலாளர் திருமலையப்பன் ஆகியோர் பார்வையிட்டு அனுப்பி வைத்தனர்.