மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

கடலூர் வெள்ளம் பாதித்த பகுதிக்கு நீதித்துறை, வழக்குரைஞர்கள் சார்பில் நிவாரணப் பொருட்கள்

கடலூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குறிப்பிட்ட பகுதிக்கு விருதுநகர் மாவட்ட நீதித்துறை மற்றும் வழக்குரைஞர்கள் சார்பில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

News image
Updated On :19 டிசம்பர் 2015, 3:28 am

கோ.ஜெயக்குமார்

கடலூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குறிப்பிட்ட பகுதிக்கு விருதுநகர் மாவட்ட நீதித்துறை மற்றும் வழக்குரைஞர்கள் சார்பில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

கடலூர், குள்ளஞ்சாவடி அருகேயுள்ள புத்தூர் பகுதியில் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்விற்குத் தேவையான உடை, சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்ட நீதித்துறை ஊழியர் சங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர் வழக்குரைஞர் சங்கம், வழக்குரைஞர்கள் எழுத்தாளர் சங்கம், விருதுநகர் பார் அசோஸியேசன், விருதுநகர் அட்வகேட் அசோஸியேசன் ஆகியவை இணைந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருள்களைத் திரட்டியுள்ளன.இவற்றை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ரா.தாரணி, விரைவு மகளிர் நீதிமன்ற நிதிபதி என்.ராஜலட்சுமி, மாவட்ட குற்றவியல் நீதிபதி வசந்தி, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி பசும்பொன் சண்முகையா, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி நம்பிராஜ், விருதுநகர் சார்பு நிதிபதி பத்மா, ஸ்ரீவில்லிபுத்தூர் வழக்குரைஞர் சங்கச் செயலாளர் திருமலையப்பன் ஆகியோர் பார்வையிட்டு அனுப்பி வைத்தனர்.

இந்த நிவாரண மற்றும் மறுவாழ்வுக்குத் தேவையான பொருட்கள் கடலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி தனபால் மூலம், புத்தூர் மக்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.