மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஒருவரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஒருவரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீஸார் கைது செய்தனர்.

News image
Updated On :21 டிசம்பர் 2015, 1:21 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஒருவரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீஸார் கைது செய்தனர்.

கோட்டையூரைச் சேர்ந்தவர் தி.சுரேஷ் (29). இவருக்கும் அருகே குடியிருக்கும் நீ.மலைச்சாமி (50) என்பவருக்கும் கழிவுநீர் பாதை தொடர்பாக பிரச்னை இருந்து வந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு கோட்டையூர் பேருந்து நிறுத்தத்திலிருந்து வந்து கொண்டிருந்த சுரேஷை வழி மறித்து தடுத்து நிறுத்தி, மலைச்சாமி தகராறு செய்துள்ளார். மேலும் சுரேஷைத் தாக்கியுள்ளார். இதில் சுரேஷ் அணிந்திருந்த 3 பவுன் செயின் அறுந்து கீழே விழுந்துள்ளது. இதில் 3-ல் இரு பாகம் மட்டுமே கிடைத்துள்ளது. இது குறித்து சுரேஷ், வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மலைச்சாமியைக் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.