மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல் : ஆண்களை விட பெண்களே அதிகம்

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இடைத் தேர்தலில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிக அளவில் தங்களது வாக்குகளை செலுத்தியுள்ளதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

News image
Updated On :13 பிப்ரவரி 2015, 11:53 am

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இடைத் தேர்தலில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிக அளவில் தங்களது வாக்குகளை செலுத்தியுள்ளதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

இன்று காலை வாக்குப்பதிவு துவங்கி, மாலை 5 மணி நிலவரப்படி, 76.89 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மொத்தம் உள்ள 2,70,000 வாக்காளர்களில் இதுவரை 2,07,821 பேர் வாக்களித்துள்ளனர்.

இதில், ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிக அளவில் வாக்களித்துள்ளனர். அதாவது, ஆண்கள் - 1,01,088 பேரும், பெண் வாக்காளர்கள் 1,06,727 பேரும், திருநங்கைகள் - 6 பேரும் தங்களது வாக்குகளை செலுத்தியுள்ளனர். 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

ஒரு வாக்குச்சாவடியை  தவிர அனைத்து இடங்களிலும் தடையின்றி வாக்குப்பதிவு நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 16ம் தேதி நடக்க உள்ளது.

மேலும் விவரமாக...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.