திருச்சி மாவட்டம், லால்குடி அருகே சிவராத்தியன்று இரவு கோயிலுக்கு சென்ற போது வீட்டின் பூட்டினை உடைத்து பீரோவில் இருந்த நகை மற்றும் பணத்தினை திருடர்கள் திருடி விட்டு தப்பியோடினர்.
லால்குடி அருகேயுள்ள வாளாடி அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் சங்கரன் (67). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். செவ்வாய்கிழமை இரவு சிவராத்தியன்று அப் பகுதியில் உள்ள கோயில்களுக்கு நன்பர்களுடன் சென்று விட்டு அதிகாலை வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டும், பீரோவில் இருந்த ரூ.30 ஆயிரம் ரொக்கம், 3 பவுன் நகை திருட்டுóபபோனது தெரியவந்தது.
இந்த திருட்டு தொடர்பாக லால்குடி போலீஸில் சங்கரன் புகார் கொடுத்ததின் பேரில் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.