மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

அரசுப் பள்ளி வகுப்பறையில் மாணவர்களிடையே மோதல்: 5 மாணவர்கள் கைது

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசுப் பள்ளி வகுப்பறையில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் இரு தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் 5 மாணவர்கள்

News image
Updated On :9 ஜூலை 2015, 1:13 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசுப் பள்ளி வகுப்பறையில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் இரு தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கூமாப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு படித்து வருபவர் எஸ்.கொடிக்குளம் கீழத்தெரு அய்யாக்காளை மகன் பவித்ரபாண்டி (16). கூமாப்பட்டி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன் மகன் அப்துல் ரகுமான் (17), அயூப்கான் மகன் அசாருதீன் (17), உமர்கத்தாப் மகன் முகமது தாவுபிக் (17). இவர்கள் அனைவரும் இப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்கள்.

எஸ்.கொடிக்குளம் கண்மாய்க்கு அருகில் உள்ள கூமாப்பட்டி பள்ளிவாசலுக்குச் சொந்தமான கிணற்றின் அருகில் 4-ம் தேதி யாரோ அசுத்தம் செய்துள்ளார்கள். இது தொடர்பாக பவித்ரபாண்டிக்கும் அப்துல் ரகுமானுக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.புதன்கிழமை வகுப்பறையில் இருந்த பவித்ரபாண்டியை, அப்துல் ரகுமான், அசாருதீன், தாவுபிக் ஆகியோர் சேர்ந்து ஆபாசமாகப் பேசி, போகவிடாமல் தடுத்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்களாம்.

இது குறித்து கூமாப்பட்டி காவல் நிலையத்தில் பவித்ரபாண்டி கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மாணவர்கள் அப்துல் ரகுமான், அசாருதீன், தாவுபிக் ஆகியோரைக் கைது செய்தனர்.

மேலும் இருவர் கைது:

பிளஸ் 2 மாணவர் அப்துல் ரகுமான் புதன்கிழமை பகலில் பள்ளியின் கேட் அருகே வரும்போது, பவித்ரபாண்டி மற்றும் இவருடன் படிக்கும் பாண்டி மகன் மணிகண்டன் (16) ஆகியோர் சேர்ந்து முன்விரோதத்தில் அப்துல்ரகுமானை ஆபாசமாகப் பேசி, அடித்து கொலை மிரட்டல் விடுத்தார்களாம். இது குறித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து பவித்ரபாண்டி, மணிகண்டன் ஆகியோரைக் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.