சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

சோரியாஸிஸ் நோயாளிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! விரைவில் வருகிறது ஒரு புது மருந்து

சோரியாஸிஸ் எனப்படும் தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை மகிழ்விக்கும் வகையில் ஒரு புது வகை மருந்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து தற்போது பல்வேறு கட்டங்களாக, சோரியாஸிஸ் நோயாளிகளுக்குக் கொடுத்து பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

News image
Updated On :9 ஜூலை 2015, 7:16 am

சோரியாஸிஸ் எனப்படும் தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை மகிழ்விக்கும் வகையில் ஒரு புது வகை மருந்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து தற்போது பல்வேறு கட்டங்களாக, சோரியாஸிஸ் நோயாளிகளுக்குக் கொடுத்து பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

இதுவரை நடைபெற்ற இரண்டு கட்ட பரிசோதனைகளில் இந்த மருந்து குறிப்பிடத்தக்க அளவில் சோரியாஸிஸ் நோயைக் கட்டுப்படுத்த அல்லது குணப்படுத்துகிறது என்று ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மனிதர்களுக்கு ஏற்படும் தோல் நோய்களில் முதன்மையாகவும், அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மன அழுத்தம், ரத்தம் அழுத்தம், இதயப் பாதிப்புகள், சர்க்கரை நோய் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியதாகவும் இருப்பது சோரியாஸிஸ். சோரியாஸிஸ் நோய்ப் பாதிப்பு உள்ளவர்களுக்கு தோலில் செதில் செதிலாக உதிருவதும், அரிப்பு, புண்கள் ஏற்படுவதும் மிகவும் சகஜம். இதன் காரணமாகவே, இந்த நோயாளிகள் அதிக அளவில் வெளியிடங்களுக்குச் செல்வதையே தவிர்க்கும் நிலை இருக்கிறது.

சோரியாஸிஸ் நோயாளிகளைப் பொறுத்தவரை, அந்த நோயோடு வாழ்க்கையைக் கழிக்க வேண்டும் என்பதுதான் மருத்துவ உலகில் சொல்லப்பட்டு வருகிறது. இதுவரை சோரியாஸிஸ் நோயைக் குணப்படுத்தும் மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. கட்டுப்படுத்துவதற்கான மருந்துகளும், தினசரி செயல்பாடுகளில் சில மாற்றங்களுமே பரிந்துரைக்கப்படுகின்றன.

குசெல்குமேப் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புதிய மருந்து, சோரியாஸிஸ் நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று அமெரிக்காவில் உள்ள நார்த்வெஸ்டர்ன் பல்கலைக் கழகத்தில் தோல் நோயியல் துறைப் பேராசிரியர் கென்னத் கோர்டான் தெரிவித்துள்ளார். இந்தப் புதிய மருந்து குறித்த ஆய்வறிக்கை மருந்துக்கான நியூ இங்கிலாந்து சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

சோரியாஸிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சுமார் 293 பேருக்கு இந்தப் புதிய மருந்து பரிசோதிக்கப்பட்டதில், பெரும்பாலானவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைத்ததாகவும், அடுத்தகட்டப் பரிசோதனையில் அந்த மருந்தின் பாதுகாப்பு உள்ளிட்ட வேறு சில விஷயங்கள் முழுமையாகப் பரிசோதிக்கப்பட உள்ளதாகவும் அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.