கடை வாடகை உயர்வு: நெய்வேலி நகரியத்தில் முழு கடையடைப்பு
கடை வாடகை உயர்வை கண்டித்து நெய்வேலி நகரிய தொழில் வணிக சங்க கூட்டமைப்பினர் திங்கள்கிழமை ஒருநாள் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தினர். காலை 6 மணி முதல் இரவு 12 மணிவரையில் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.








