மதிய உணவு திட்டத்திற்கு காமராஜர் பெயர் வைக்கக் கோரி மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடுவிடம் நாடார் மஹாஜன சங்கத்தின் நிர்வாகிகள் கோரிக்கை மனுவை அளித்தனர்.
விருதுநகர் கேவிஎஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் காமராஜர் 113-வது பிறந்த நா்ள் விழா கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் வெங்கய்யாநாயுடு, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, மதிய உணவு திட்டத்திற்கு காமராஜர் பெயர் வைக்க வலியுறுத்தும் கோரிக்கை மனுவை நாடார் மஹாஜன சங்கத்தின் தலைவர் முத்துச்சாமி, பொதுச்செயலாளர் ஜி.கரிக்கோல்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் மத்திய அமைச்சரிடம் அளித்தனர்.
மேலும், இக்கோரிக்கை குறித்து பிரதமரிடம் நேரில் எடுத்துரைப்பதாக சங்க நிர்வாகிகளிடம் அவர் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து நாடார் வரலாறு குறித்த குறுந்தகடையும் சங்கத்தினர் வெளியிட அதையும் மத்திய அமைச்சரும், பொரூளாதார நிபுணர் மற்றும் பத்திரிக்கையாளருமான எஸ்.குருமூர்த்தி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.